ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள டாம்கான் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று (04) வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
400 மீற்றர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த விபத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. குறித்த பகுதியில் 6 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. இன்று காலையில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.