நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொண்டிகிரிஸ்டோ தோட்டத்தில் வீடொன்றின் அறையில் தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புடவையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் கழுத்து சிக்குண்டு 9 வயது வயதான சிறுவனே உயிரிழந்தார்.
வீட்டில் இருந்த மற்றுமொரு சிறு குழந்தைக்கு கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போதே குறித்த சிறுவன் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.