நாவலப்பிட்டியில் துயரச்சம்பவம்

Date:

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொண்டிகிரிஸ்டோ தோட்டத்தில் வீடொன்றின் அறையில் தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புடவையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் கழுத்து சிக்குண்டு 9 வயது வயதான சிறுவனே உயிரிழந்தார்.

வீட்டில் இருந்த மற்றுமொரு சிறு குழந்தைக்கு கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போதே குறித்த சிறுவன் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.​

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...