நிலாவெளி – கோபாலபுரம் பகுதியில் கடற்கரைக்கு சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா – நெலுக்குளம் பகுதியில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்திருந்த குழுவினரில் இருந்த மாணவர்களே இவ்வாறு, பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
12, 10, 14 மற்றும் 9 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்னர்.
பொலிஸ் உயிர்காப்புப் பிரிவில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பொலிஸ் உயிர்காக்கும் படையினர் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, மாணவர்கள் அலையில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு உடனடியாக கடலில் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.