நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்!

Date:

நிலாவெளி – கோபாலபுரம் பகுதியில் கடற்கரைக்கு சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – நெலுக்குளம் பகுதியில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்திருந்த குழுவினரில் இருந்த மாணவர்களே இவ்வாறு, பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

12, 10, 14 மற்றும் 9 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்னர்.

பொலிஸ் உயிர்காப்புப் பிரிவில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பொலிஸ் உயிர்காக்கும் படையினர் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, ​​மாணவர்கள் அலையில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு உடனடியாக கடலில் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...