பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி !

Date:

கம்புருபிட்டிய, சபுகொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் தருஷ தினுவர என்பரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

இவர் கம்புருபிட்டிய உல்லல்ல பிரதேசத்தில் வசித்து வந்தவர் என்பதுடன், பாடசாலையில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டதன் பின்னர் நண்பர்களுடன் நீராடச்சென்ற நிலையிலேயே நீரில் மூழ்கியுள்ளார்.

 

நீரில் மூழ்கிய நிலையில், பிரதேசவாசிகளின் தேடுதலில் மூன்று மணித்தியாலங்களின் பின்னரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

எவ்வாறாயினும், மாணவர் உடனடியாக கம்புருபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...