பேருந்து விபத்தில் ஆறு மாத குழந்தை பலி

Date:

கண்டி – மஹியங்கனை வீதியில் குருலுபொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு (09) கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பிரேக் செயலிழந்து மண்மேடு ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பிபில பிரதேசத்தை சேர்ந்த 06 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.

விபத்தில் சாரதி உட்பட ஏழு ஆண்களும், பத்து பெண்களும், மூன்று சிறுவர்களும் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாத்திரை சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போதே பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...