போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Date:

மூன்று கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 9 கிராம் 100 மில்லி கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய 248,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் திருடப்பட்ட தங்கச் சங்கிலி, திருட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் போதைப்பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று(01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...