அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் கடந்த 2014, 2015-ஆம் ஆண்டுகளில் ஆர்.சி.பி அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் இவருக்கு ஐபிஎல்ஐபிஎல்
மவுசு அதிகம் இருந்தும் தனது தாய் நாட்டிற்காக நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் தொடரிலும், டி20 போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து மிட்சல் ஸ்டார்க் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.