சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது.
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
The moment Pragyaan Rover successfully walked out of Vikram Lander on to the Lunar surface.#Chandrayaan3pic.twitter.com/5WZy87Uzdj
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 23, 2023
நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக இந்தியா தனது சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய பிறகு, நிலவின் மேற்பரப்பில் எழுந்த தூசி துகள்கள் அடங்கிய பிறகே விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தரையிறங்கி கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பிறகு தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமான நிலவின் மேற்பரப்பில் இறங்கியுள்ளது.
#Chandrayaan3: #Pragyan rover has started rolling out 🇮🇳 pic.twitter.com/9rSNzvWT7Y
— Indian Aerospace Defence News – IADN (@NewsIADN) August 23, 2023