யாழ். நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
நெல்லியடியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் இன்று (08) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.