கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07) 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை மாலை 5.00 மணி முதல் நாளை மறுதினம் (08) காலை 08.00 மணிவரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், கொழும்பு – 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமறிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் இதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.