போலியான அல்லது மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் சிலவற்றின் மூலமாக இந்தியாவுக்கான இலத்திரனியல் விசாவினை வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவுக்கான இ – விசாவினைப் பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறான போலி இணைய முகவரிகளைப் பயன்படுத்த வேண்டாமென விண்ணப்பதாரிகளிடம் அறிவுறுத்தப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சுமார் 125 போலி இணைய தளங்கள் இனங்காணப்படுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.