உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
இங்கிலாந்து அணி:-
1. பேர்ஸ்டோவ், 2. தாவித் மலான், 3. ஜோ ரூட், 4. பென் ஸ்டோக்ஸ், 5. ஜாஸ் பட்லர், 6. லிவிங்ஸ்டோன், 7. மொயீன் அலி, 8. கிறிஸ் வோக்ஸ், 9. டேவிட் வில்லே, 10. அடில் ரஷித், 11. மார்க் வுட்.
இந்திய அணி:-
1. ரோகித் சர்மா, 2. சுப்மன் கில், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. கே.எல். ராகுல், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஜடேஜா, 8. குல்தீப் யாதவ், 9. முகமது ஷமி, 10. பும்ரா, 11. முகமது சிராஜ்.
உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை ஐந்து போட்டிகளில் சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. முதன்முறையாக முதலில் பேட்டிங் செய்து இலக்கு நிர்ணயிக்க இருக்கிறது.