2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய 33 ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் சுப்மன் கில் அதிகூடிய ஓட்டங்களாக 92 ஓட்டங்களையும், விராட் கோலி 88 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்படி 358 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமறிங்குகிறது.