வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

Date:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டு காரணமாக வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்திற்கு மாயா, பூர்ணிமா, ஐஷு, அட்சயா, ரவீனா மற்றும் ஜோவிகா ஆகியோர்கள் தான் முக்கிய காரணம் என்பதும் இவர்கள் பிரதீப்பால் தங்களுக்கு ஆபத்து என கமல்ஹாசன் இடம் ரெட்கார்ட் காட்டியதால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி கடந்த சனி ஞாயிறு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ’பிரதீப் வெளியேற்றத்திற்கு நீங்கள் கொடுத்த ரெட் கார்டு தான் காரணம் என்றும் என்னை பிளேயர் ஆக சேர்க்காதீர்கள் என்றும் நீங்கள் உங்களுக்கு அநியாயம் நடந்ததாக கூறி ரெட் கார்ட் கொடுத்ததால் தான் பிரதீப் வெளியேறினார் என்பதையும் திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாக கூறி பிரதீப் வெளியேற்றத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது தான் மாயா தனது தவறை உணர ஆரம்பித்தது போல் தெரிகிறது. ’பிரதீப் வெளியேற்றம் என்பது நம்மால் தான் நடந்தது என்பது தெரிய வந்தால் வெளியே அவருடைய ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது’ என்று நிக்சனிடம் கூறும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அப்போது நிக்சன் ’வெளியே போய் பிரதீப்பை நேரில் சந்தித்து சமாளித்துக் கொள்ளலாம்’ என்று கூற அப்போதும் மாயா தனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் ’அதெல்லாம் சந்திக்க முடியாது, அவன் என்ன பெரிய இவனா’ என்று கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மேக்ஸ்வெல் விளையாடுவார்

உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதி...