இரவு என்பதே இருக்காது! பேரழிவுகள் ஏற்படும்..பாபா வாங்காவின் அதிர வைக்கும் கணிப்புகள்

Date:

2024ஆம் ஆண்டில் உலகம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் என்பது உட்பட பாபா வாங்காவின் அதிர வைக்கும் கணிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் 2024ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் பரவின.

அதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது நாட்டைச் சேர்ந்தவர்களாலேயே கொல்லப்படுவார் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் 5079ஆம் ஆண்டு வரை என்ன சம்பவங்கள் நடைபெறும் என்று பாபா வாங்கா கணித்ததாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 2024ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை உலகம் சந்திக்கும்.

புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். உலகின் மிகப்பெரிய நாடு ஒன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை செய்யும் என்று பாபா வாங்கா கணித்திருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் அடுத்த ஆண்டு பூகம்பம், வெள்ளம் என பேரழிவுகள் ஏற்படும் என்றும், 2028ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்திற்கு மனிதர்கள் செல்வார்கள் என்றும் அவர் கணித்து வைத்துள்ளாராம்.

அதேபோல் 2100 ஆண்டுக்கு பிறகு செயற்கை சூரியஒளி உருவாக்கப்பட்டு இரவு என்பதே பூமியில் இல்லாமல் போகுமாம்.

மேலும் 5079ஆம் ஆண்டுடன் ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடுமாம். பாபா வாங்கா ஆண்டுக்கு 6 கணிப்புகள் வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் கணிப்புகளை எழுதி வைத்துள்ளாராம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....