வங்கதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஒரு நபராக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற சாதாரண உள்ளூர் தொடரில் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக நடுவர் முன்பிருந்த ஸ்டம்பை எட்டி உதைத்து பிடுங்கி எறிந்த ஷாகிப் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
Shakib Al Hasan slapped a fanpic.twitter.com/oJrnWlfpDw
— Don Cricket 🏏 (@doncricket_) January 8, 2024
அந்த நிலைமையில் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேத்யூஸ் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக நடுவர்களிடம் கூறிய ஷாகிப் அல் ஹசன் அவருக்கு அவுட் கொடுக்குமாறு கேட்டு வாங்கியது மற்றுமொரு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில் வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்டவரை விட 1.50 லட்சம் வாக்குகள் பெற்று சாகிப் எம்.பி. ஆனார். இந்நிலையில் ரசிகர் ஒருவரை சாகிப் கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
Many were saying #Shakib is rude & arrogant personality. Look at this man, he is too calm & gentle. One of best all-rounder knows how to maintain calmness. One of my favourite cricketer. #ShakibAlHasan #Shakib75 #Cricket pic.twitter.com/4sgN6pdzia
— Arif Meaji (@meajiarif) January 7, 2024
இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக சாகிப் அமர்ந்திருந்தார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்றதுமே எங்களை மறந்து திமிராக நடந்து கொள்கிறீர்களா நீங்கள் எல்லாம் மனிதரா என்று ரசிகர்கள் தற்போது அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.