வில்லாக உடலை வளைத்து அந்தரத்தில் கேட்ச்!

Date:

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடந்த SA20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பாடியது.

ஜோர்டான் 21 (19) ஓட்டங்களில் அவுட் ஆனதைத் தொடர்ந்து அபெல் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் தாவித் மலான் மற்றும் கேப்டன் மார்க்ரம் பார்ட்னர்ஷிப் அமைந்தனர்.

இந்தக் கூட்டணி 49 ஓட்டங்கள் எடுத்தது. மலான் 45 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.

அணியின் ஸ்கோர் 128ஆக உயர்ந்தபோது, 30 (23) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் மார்க்ரம் அவுட் ஆனார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. கேசவ் மகாராஜ், ஜூனியர் டலா தலா 2 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் மற்றும் பிரிட்டோரியஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டர்பன் அணி, பார்ட்மேன் மற்றும் மார்கோ யென்சென் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பார்ட்மேன் பந்துவீச்சில் ஜேஜே ஸ்முட்ஸ் அடித்த ஷாட்டை, மார்க்ரம் அந்தரத்தில் பறந்து ஒற்றை கையால் கேட்ச் செய்து மிரட்டினார்.

அதன் பின்னர் டி காக் 20 ஓட்டங்களிலும், முல்டர் 38 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட கிளாசென் 15 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆக, டர்பன் அணி 106 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மார்கோ யென்சென் மற்றும் பார்ட்மேன் தலா 4 விக்கெட்டுகளும், லியாம் டாவ்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....