நிலவும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றல் மற்றும் தோலில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த நோய் நிலைமைக்கு சிறார்கள் அதிகமாக பாதிக்கப்படுவுதாகவும் இது போன்ற நோய் நிலைமைகள் குறித்து மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.