சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த போதிலும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பும் முடிவை அவர் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் வனிந்து ஹசரங்கவின் இடைநீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.