டி20 உலகக்கோபை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு உலகக் கோப்பை வருவதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் மிகப்பெரிய அளவில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்திய அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு இருக்காது கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
விராட் கோலி சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் அணியில் இணைவதற்கு தயாராகி வருகிறார். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் டாப் 3 பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங்கிற்கு இடம் உறுதி என்பதில் சந்தேகம் இருக்காது.
அதிவேகமாக பந்து வீசும் மயங்க் யாதவ் தேர்வாளர்கள் மனதில் இடம் பெறலாம். வேகப்பந்து வீச்சுக்கான இடத்தை பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடிக்கலாம்.