ஐபிஎல் தொடரின் நேற்றைய 31-வது லீக் போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும்.
அதைத் தொடர்ந்து 224 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 19 (9) ரன்னில் அவுட்டாகினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
அதனை தொடர்ந்து பட்லர் -ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்து. அதிரடியாக விளையாடி ரியான் பராக் 34 ரன்களில் அவுட்டாகினார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0, ரோவ்மன் போவல் 26, ரன்களில் அவுட்டாகினர்.
இருப்பினும் தொடர்ந்து ஒற்றை ஆளாக நின்ற பட்லர் கொல்கத்தா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அபாரமான சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 107* (60) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ராஜஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (224) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் அணி சமன் செய்தது. இதற்கு முன் 2020 சீசனில் பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
THE EMOTIONAL WINNING CELEBRATION BY JOS BUTTLER. ❤️ pic.twitter.com/NBHd0FfkNj
— Johns. (@CricCrazyJohns) April 16, 2024