4 சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன்? டுவிஸ்ட் வைத்த ரோகித் சர்மா

Date:

டி20 உலகக் கோப்பை ஜூன் 1-ந் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்காத சில வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய அணி தேர்வு குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

அதில் ரோகித் கூறியதாவது:-

4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை. அதற்கான காரணம் என்பது இப்போது நான் கூறவிரும்பவில்லை. அமெரிக்காவில் நடைபெறும் போட்டியின் போது புரியும்.

ஒரு ஆஃப்-ஸ்பின்னரை சேர்ப்பதற்கான விருப்பம் பற்றி நாங்கள் விவாதித்தோம். துரதிர்ஷ்டவசமாக வாஷிங்டன் சுந்தர் அதிகம் கிரிக்கெட் விளையாடவில்லை. இதனால் அஸ்வின் மற்றும் அக்சரை எடுப்பதில் விவாதம் இருந்தது. 2 இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். மேலும் அக்சர் 50 ஓவர் உலகில் இருந்து சிறப்பாக ஆடி இருக்கிறார். அவர் நன்றாக பந்துவீசுகிறார். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....