தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானிலுள்ள இலங்கையர்களுடன் பொதுக் கூட்டமொன்றிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் வெளிவிவகார குழு இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைய ஜப்பானின் Tsukuba நகரிலுள்ள Yatabe Citizen மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை குறித்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து ஜப்பானிலுள்ள இலங்கை வர்த்தக குழுக்களையும் அவர் சந்திக்கவுள்ளார். ஜப்பானின் அரச தரப்பு முக்கியஸ்தர்கள் பலருடனும் அனுர குமார திஸாநாயக்க கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.