பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு

Date:

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இரு வேறு சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர். இதில் முதல் சம்பவத்தில், பத்கேலா நகரில் பகதூராபாத் பகுதியில், 2 குழுக்கள் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் ஒருவரையொருவர் சுட்டு கொண்டனர்.

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். ஒருவர் காயமுற்றார். இதேபோன்று, குர்ராம் பழங்குடியின மாவட்டத்தில், லோயர் குர்ராம் பகுதியில் டேட் குமார் என்ற இடத்திற்கு அருகே பஸ்சை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும், சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....