பதுளை – லுணுகலை பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
லுணுகலை – அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் நால்வர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு முற்பட்ட தொழிற்சாலை ஊழியர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதன்படி, 29 வயதுடைய ஆணொருவரும், 40 முதல் 56 வயதுக்கிடைப்பட்ட நான்கு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவரும் லுணுகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




