வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் பயணிக்கும் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டிசம்பர் 11 ஆம் திகதி அளவில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பை அடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடல் பகுதிகளில் கிலோ மீட்டருக்கு தற்காலிகமாக மிக பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்த அறிவிப்புகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவ மற்றும் கடல் பயணத்தில் ஈடுபடுவோரை கேட்டுக்கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....