கால்வாயில் இருந்து சிசுவின் சடலம் கண்டுபிடிப்பு

Date:

அங்குலான ரயில் நிலைய வீதியில் உள்ள கால்வாயில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கால்வாயில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த இருவருக்கு குறித்த சிசுவின் சடலம் இன்று (16) கிடைத்துள்ளது.

குறித்த இருவரும் கால்வாயில் இருந்து குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் உர மூட்டை ஒன்று காணப்பட்டுள்ளது.

குறித்த உரை மூட்டையில் மற்றொரு பையில் இருந்து குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இது தொடர்பில் குறித்த 2 பேரும் பொலிசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, பொலிசார் வந்து, குறித்த சடலம் புதிதாக பிறந்த சிசு ஒன்றினுடையது என்பதை உறுதி செய்தனர்.

கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் வந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் மொரட்டுவை பதில் நீதவான் வந்து சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

சிசுவின் சடலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கால்வாயில் வீசப்பட்டதாகவும், சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் சரியான வயதைக் கண்டறிய முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....