தற்போதைய அரசாங்கம் தவறிழைத்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் எந்தவொரு அரசியல் பழிவாங்கல்களையும் முன்னெடுக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா குறிப்பிட்டுள்ளார்.




