கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் கடற்றொழிலாளர்களின் ஆலோசனைகள் கோரப்பட வேண்டும் என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
குறித்த சங்கத்தின் வருடாந்த இறுதிக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (31) இடம்பெற்றது.
இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குறித்த சட்டத்திருத்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரின் ஊடாக கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.




