சீகிரியாவில் சுற்றுலா பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல்

Date:

சீகிரிய பிரதேசத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் இன்று (03) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் நடைபெற்றது.

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், வன பாதுகாப்பு திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, தம்புள்ளை பிரதேச செயலகம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இக்கலந்துரையாடலில், அனுமதிச்சீட்டு வரிசையில் நீண்ட நேரம் நிற்பது, முதலுதவி நிலையங்கள் இல்லாமை, போதிய நீர் வசதியின்மை, குளவி கொட்டினால் பாதுகாப்பு போன்ற 15 விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், ஒவ்வொரு நாளும் 11,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாகவும், அடுத்த வருடம் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக சுற்றுலாத்துறையை தேசிய நலன் கருதி வெற்றியடைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....