குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்கத் தீர்மானம்!

Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 24 மணி நேரமும் இயங்கி, நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்குவதை உறுதி செய்வதற்காகக் கூடுதல் ஊழியர்களை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கடவுச்சீட்டுப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைக்கமைய ‘பி’ வகைக் கடவுச்சீட்டுக்கள் 1,100,000 இனை சமகால விநியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான பெறுகை செயன்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தவும், பிற அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தற்காலிகமாக கடவுச்சீட்டுக்களை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....