நாட்டுக்குப் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 530,746 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 240,217 பேர் நாட்டுக்கு வந்துள்ளனர்.
மார்ச் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 37,768 சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரஸ்யாவில் இருந்து 5,768 பேரும் இந்தியாவிலிருந்து 5 ,373 பேரும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து 3,847 பேரும், ஜேர்மனியிலிருந்து 3,381 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
மேலும், பிரான்சிலிருந்து 2,612 பேரும், சீனாவிலிருந்து 1,922 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
ஏனைய நாடுகளிலிருந்து 10,913 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.




