பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குருகம்மோதர , பதுவத்த வீதியின் 7 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் மாட்டுவாகல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம் பெற்ற வேளையில் முச்சக்கரவண்டியில் பெண்ணொருவரும் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்




