அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சம்பவத்தினால் ஏனைய வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அரச வைத்தியசாலையில் பணியில் இருக்கும் வைத்தியர் ஒருவர் இலக்கு வைக்கப்படுவது மிகவும் கவலையளிப்பதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக பாரிய கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.




