ஒரே ஒரு உத்தரவு போதும்; சீனாவின் ‘மானஸ் ஏ.ஐ., ஏஜன்ட்’ தொழில்நுட்பம்

Date:

ஒவ்வொரு பணிக்கும் உத்தரவு தேவையின்றி, ஒரே உத்தரவில், அது பற்றிய அனைத்து தரவுகளையும் மானஸ் கொட்டி விடும்

‘டீப்சீக்’ என்ற ஏ.ஐ., மாடலை அறிமுகப்படுத்திய சில வாரங்களிலேயே, அதைவிட மேம்பட்ட ‘மானஸ்’ ஏ.ஐ., மாடலை சீனா அறிமுகம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யின் ஆதிக்கம் உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது.

கூகுள் ஏ.ஐ., ஓப்பன் ஏ.ஐ., ஆகியவை பிரபலமாகி வந்த நிலையில், அமெரிக்க கண்டுபிடிப்புகளுக்கு போட்டியாக, டீப்சீக் என்ற ஏ.ஐ., மாடலை சீனா அண்மையில் அறிமுகம் செய்தது.

பங்குகள் நிலவரம்

டீப்சீக் ஏ.ஐ., பதிவிறக்கம் அதிகரித்ததால், ஓப்பன் ஏ.ஐ., பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், ‘மானஸ் ஏ.ஐ., ஏஜன்ட்’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாடலை, சீனா தற்போது அறிமுகம் செய்துள்ளது.

மற்ற எல்லா ஏ.ஐ., மாடல்களையும் விட நவீனமாக, நிஜ உலகின் சவால்களை யோசிப்பது, திட்டமிடுவது, தானே செயல்படுத்துவது என அனைத்தையும் மானஸ் செய்து விடுகிறது.

இணையதளங்களை உருவாக்குவது, பயணங்களை திட்டமிடுவது, பங்குகள் நிலவரத்தை ஆராய்ந்து முதலீட்டுக்கு உதவுவது உட்பட, இந்த ஏ.ஐ., மாடல் செய்யக்கூடிய செயல்கள் ஏராளம் என்கிறது, இதை வடிவமைத்துள்ள சீன ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘மோனிகா!’

வழக்கமான ஏ.ஐ., சாட்பாட்கள், நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும். ஆனால், மானஸ் ஏ.ஐ., வசம் ஒரு பணியை கொடுத்தால், அதன் பின் நம்மை சாராமல், அதுவே முழுதுமாக முடித்து கொடுத்துவிடும் ஆற்றல் கொண்டது.

உதாரணமாக, காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை தேவை என கேட்டால், அதுவே ஆராய்ச்சி செய்து, அறிக்கை தயாரித்து, அட்டவணைகளை உருவாக்கி, அனைத்தையும் ஒருங்கிணைத்து, இறுதி ஆவணமாக கொடுத்து விடும்.

மோனிகா நிறுவனம் வெளியிட்ட அறிமுக வீடியோவில், இணையதளத்தில் மானஸ் ஏ.ஐ., கலந்துரையாடுவது, தகவல்களை சேகரிப்பது, சிக்கலான உத்தரவுகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது ஆகியவை இடம்பெற்றன.

புதிய புரட்சி

இணையதளத்தை பிரவுசிங் செய்து, ஸ்கிரீன் ஷாட் எடுத்து, ஆன்லைன் பணிகளை பதிவு செய்து, அறிக்கை தயாரித்து, பவர் பாயின்ட் விளக்கமாக மானஸ் வழங்கியது. இது, ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய புரட்சி என கருதப்படுகிறது.

ஒவ்வொரு பணிக்கும் உத்தரவு தேவையின்றி, ஒரே உத்தரவில், அது பற்றிய அனைத்து தரவுகளையும் திரையில் மானஸ் காட்டி விடும்.

அதாவது, மளிகை கடைக்கு போன் போட்டு, அரிசி மூட்டை வந்திருக்கிறதா என சிங்கம் படத்தில் நடிகர் விவேக் விசாரிப்பதையும், நடிகர் சூர்யா விசாரிப்பதையும் இதனுடன் ஒப்பிடலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....