கோழிக்கறி சாப்பிட்ட குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

Date:

இந்தியா வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.

உடற்கூற்று பரிசோதனை
மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த 38 வயதான நபரே இவ்வாறு வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் நடுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு சப்பாத்தியுடன் கோழிக்கறி சமைத்து இருவரும் சாப்பிட்டுள்ளனா்.

அப்போது, குறித்த நபரின் தொண்டையில் கோழிக்கறி எலும்பு குத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவா் மயங்கி விழுந்துள்ளாா்.

இவரை பரிசோதித்த 108 அவசர சிகிச்சை வாகனப் பணியாளா்கள், இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து இவரது மனைவி முறைப்பாட்டில் வாழப்பாடி பொலிஸாா், உடற்கூற்று பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....