பெலவத்தை – நெலுவ பிரதான வீதியில் 7 கணுவ விகாரைக்கு அருகில் இன்று (20) பிற்பகல் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியும் பாரவூர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.




