இந்தியா ஊடாக பங்களாதேஷ் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை விதிப்பு!

Date:

இந்தியத் துறைமுகம், விமானநிலையம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஊடாக பங்களாதேஷ் பொருட்கள் கொண்டு செல்ல மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்கள் பரிமாற்றம் செய்யும் வசதிகளை இந்திய அரசாங்கம் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதிகளின் காரணமாக டாக்காவில் ஏற்றுமதி – நேபாளம், பூட்டான், மியன்மார் ஆகிய அண்மை நாடுகளுக்கு சுமுகமாகப் பயணிப்பதற்கு உதவியுள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த வசதியை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள பொருட்கள் முந்தைய நடைமுறையின் கீழ் இந்தியப் பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இடைக்கால அரசின் பிரதான ஆலோசகர் முஹம்மட் யூனுஸ் இந்தியாவின் வடகிழக்கு பகுதி நிலத்தால் சூழப்பட்டதாகவும், பங்களாதேஷ் அதன் ஒரே கடல்வழி நுழைவாயில் என்றும் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வலயத்தில் சீனா தனது பொருளாதார இருப்பை விரிவுபடுத்த வேண்டும் என சீனாவிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டபோது யூனுஸ் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....