2000 ரூபா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Date:

பொது மக்கள் தம்வசம் வைத்திருக்கும் ரூ.2000 ரூபாய் இந்திய நாணயத்தாள்களை இந்திய வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளும் இறுதித் திகதி செப்டெம்பர் 30 ஆம் திகதி என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவனையிலிருந்த ரூ. 6.73 இலட்ச கோடி ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த 2000 ரூபாய் நாணய புழக்கம், 2023 மார்ச் மாதத்தில் ரூ. 3.62 இலட்ச கோடி ரூபாயாக குறைவடைந்துள்ளதாக அறிவித்திருந்த இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் புழக்கத்திலுள்ள ஏனைய நாணயத்தாள்கள் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள போதுமானதாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த 2000 ரூபாய் நாணயத்தாளை மீளப் பெறுவது தொடர்பான அறிவித்தல் வெளியாகி முதல் 20 நாட்களுக்குள் புழக்கத்திலிருந்த சுமார் 50சதவீதமான நாணயத்தாள்கள் வங்கிகளுக்கு கிடைத்திருந்ததாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக, இந்தியா முழுவதிலும் காணப்படும் 19 ரிசர்வ் வங்கி கிளைகள் மற்றும் எந்தவொரு வங்கிக் கிளைகளிலும் இந்திய 2000 ரூபாய் தாள்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...