அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்

Date:

தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தவர்கள், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பென்ன பகுதிக்கு அருகில் வீதியில் வாகனங்களை நிறுத்தி மதிய உணவு உட்கொண்டு ஓய்வெடுக்கும் காட்சிகளைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தெற்கு அதிவேக வீதியின் தெற்கிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிவேக வீதி பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

போக்குவரத்து சட்டத்தின் கீழ், அதிவேக வீதியில் எந்தவொரு இடத்திலும் அல்லது வீதியின் எந்தவொரு பகுதியிலும் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அவசர ஒழுங்கையில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி உள்ளது என்பது அத்தியாவசிய அவசர சந்தர்ப்பங்களில் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பேருந்துகள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டமைக்கான காரணம், வெலிப்பென்ன சேவைப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் போதுமான இடவசதி இல்லாததே என தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....