இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு

Date:

இலங்கையில் தற்போது உள்ள இஸ்ரேலிய சேவையாளர்களுக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

தற்போதைய இராணுவ சூழ்நிலை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டதால், திட்டமிடப்பட்ட திகதிகளில் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாவிட்டால், அவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் மறு நுழைவு விசா காலாவதியானால், அவர்கள் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாது என்பதால், இன்றைய தினத்திற்குள் (15) அது குறித்து தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா கோரியுள்ளார்.

மறு நுழைவு விசா காலத்தை நீட்டிப்பது குறித்து இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், எனவே தற்போது நாட்டில் உள்ள இஸ்ரேல் செல்ல காத்திருக்கும் பணியாளர்கள் தொடர்புடைய விபரங்களை இன்று பின்வரும் தொலைபேசி எண்களுக்கு வட்ஸ்சப் மூலம் அனுப்புமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுர் மேலும் அறிவித்துள்ளார்.

071-844 73 05, 071-683 35 13 அல்லது 071-974 2095

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....