நிலந்தவின் பணிநீக்கம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு.

Date:

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை ஒரு நேர்மறையான நடவடிக்கையாகக் கருதினாலும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி குற்றவியல் வழக்கினை தாக்கல் செய்வதே அவசியமானது என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் பாதிரியார் சிரில் காமினி, இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பணியாற்றி இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட நிலந்த ஜயர்த்தனவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு சமீபத்தில் தீர்மானித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாக, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கையின் போது குற்றப்பத்திரிகையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....