ஐதராபாத் அணி கேப்டனாக முகமது சிராஜ் நியமனம்

Date:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், ரஞ்சி டிராபி தொடரில் ஐதாராபாத் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் கடைசி இரண்டு போட்டியில் வருகிற 22-ந்தேதி மும்பையையும், ஜனவரி 29-ந்தேதி சத்தீஸ்கர் அணியையும் ஐதராபாத் எதிர்கொள்கிறது.

ஐதராபாத் அணியின் கேப்டனாக திலக் வர்மா செயல்பட்டு வந்தார். அவர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் திலக் வர்மா விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

முகமது சிராஜ் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....