35 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

Date:

ஒருகொடவத்தை இலங்கை சுங்க முனையத்தில் உணவுப் பொதி மற்றும் ஒலிபெருக்கியில் ஒரு தொகுதி போதைப்பொருள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது, இலங்கை சுங்க மற்றும் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 35 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதி இத்தாலியில் இருந்து விமானம் மூலம் இந்  நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த போதைப்பொருள் கையிருப்பின் சந்தைப் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பொருட்கள் விநியோக நிறுவனம் ஒன்றிற்கு இந்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதியை ஆர்டர் செய்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...