தண்ணீருக்குள் பாயும்.. அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா..

Date:

வடகொரியா ஏவுகணை சோதனைகளின் நீட்சியாக, நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தும் அதிநவீன ஏவுகணையை சோதித்துள்ளது. இந்த வீடியோவை வடகொரியா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து தென் கொரிய பிராந்தியத்தில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா, அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதித்தது. கடந்த 21ம் திகதி முதல் 23ம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த சோதனைகளை தென் கொரியாவும் உறுதிப்படுத்திய நிலையில், இதுதொடர்பான படங்களை வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், வடகொரியாவின் அணு சக்தி போர் திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இது எச்சரிக்கையாக இருக்கும் வடகொரியா ராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

எதிரிநாட்டு கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை குறிவைத்து நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தும் அதிநவீன ஏவுகணையை சோதித்து வடகொரியா அண்டைநாடுகளை அதிரவைத்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நடந்து வரும் சூழலில், வடகொரியாவின் இந்த சோதனையும் உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.

https://twitter.com/WarGonza12/status/1639118255775432705

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....