பூண்டுலோயா திருவிழாவில் நகை கொள்ளை.

Date:

பூண்டுலோயா ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேக திருவிழாவில் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 7 பெண்கள் மற்றும் 2 ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பல்லேகலை , வவுனியா, புத்தளம், யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

நகைகளை இழந்தவர்கள் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து பூண்டுலோயா திருவிழாவில் திருடப்பட்ட 17 பவுண் நகைகளும், அதற்கு மேலதிகமாக திருடப்பட்ட 100 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நேற்றைய தினம் நாவலப்பிட்டி நீதிவானிடம் முன்னிலைப்படுத்திய போது, அவர்களை அடையாள அணிவகுப்புக்காக தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...