யாழில் சிறுவர் இல்லம் முற்றுகை

Date:

யாழ்ப்பாணம் – இருபாலை பகுதியில் அனுமதியின்றி நடத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அவர்கள், சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஊடாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உரிய வகையிலான பராமரிப்பு மற்றும் வசதிகள் அந்த சிறுவர் இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து குறித்த சிறுவர் நிலையம் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....