மறுசீரமைப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது

Date:

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவுடன் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உத்தேச புதிய மின்சாரச் சபை சட்டத்தின் செயற்பாட்டு வரைவு மேம்பாட்டு முகவர்கள், வலுசக்தி நிபுணர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் பகிரப்பட்டுள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த குழு இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் அதன் பொறியிலாளர்கள் சங்கம் ஆகியவற்றை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கை மின்சாரசபையில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களையும் விரைவில் குறித்த குழு சந்திக்கவுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஏப்ரல் மாத இறுதிக்குள் உத்தேச புதிய மின்சாரச் சட்டத்தின் இறுதி வரைவு கிடைக்கும் என தாம் நம்புவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...