50 இலட்சம் ரூபாய் தொடர்பில் ஐவரிடம் வாக்கு மூலம்

Date:

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் காணாமல்போனமை தொடர்பில், இன்றைய தினமும், 5 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில், கொழும்பு – கோட்டை காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு காணாமல் போயுள்ளதாக, கொழும்பு – கோட்டை காவல்துறையில், மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்தனர்.

குறித்த பணக் கட்டை, எவரேனும் திருடினார்களா? அல்லது, கணக்கிடும்போது, அந்தப் பணக் கட்டு அவதானிக்கப்படவில்லையா என்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியும், இந்தச் சம்பவம் குறித்து, உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கிறது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...