50 இலட்சம் ரூபாய் தொடர்பில் ஐவரிடம் வாக்கு மூலம்

Date:

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் காணாமல்போனமை தொடர்பில், இன்றைய தினமும், 5 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில், கொழும்பு – கோட்டை காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு காணாமல் போயுள்ளதாக, கொழும்பு – கோட்டை காவல்துறையில், மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்தனர்.

குறித்த பணக் கட்டை, எவரேனும் திருடினார்களா? அல்லது, கணக்கிடும்போது, அந்தப் பணக் கட்டு அவதானிக்கப்படவில்லையா என்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியும், இந்தச் சம்பவம் குறித்து, உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...