பாகிஸ்தானில் ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து

Date:

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயந்துபோன தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதனிடையே தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பல மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தில் தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு வெளியேறியது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மேலும் தொழிற்சாலை இடிந்து விழுந்து மீட்பு பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....